ஓபிஎஸ், குஷ்பு, எல்.முருகன், துரைமுருகன் வாக்களித்தனர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (09:00 IST)
ஓபிஎஸ், குஷ்பு, எல்.முருகன், துரைமுருகன் வாக்களித்தனர்!
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தேனி தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல் நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நாம் தமிழர் கட்சியின் சீமான் வளசரவாக்கம் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை அருகே உள்ள கல்லூரியிலும் வேலூர் காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் வாக்களித்தனர் 
 
அதேபோல் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வாக்களித்தார். ஏஆர் ரகுமான் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். சென்னையில் எளிமையாக வரிசையில் நின்று நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார்
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார் தனது வாக்கை பதிவு செய்தார். சிவகங்கையில் ப சிதம்பரம் தனது வாக்கை திவு செய்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments