வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக ஆட்சி: ஒபிஎஸ் - ஈபிஎஸ் அதிரடி!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:21 IST)
வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என ஒபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
திமுக ஆட்சியில் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது என அதற்கு கண்டனம் தெரிவித்து ஒபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த பத்தாண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. 
 
ஆட்சிக்குவந்து ஒருமாதமே முடிந்தநிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் திமுக ஆட்சி முதலிடம் என குற்றம் சாட்டியுள்ள ஒபிஎஸ்-ஈபிஎஸ்,  ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் மக்களை வாட்டி வதைக்கிறது என கூறியுள்ளனர். மேலும், எந்த அச்சறுத்தலும் அதிமுகவை நெருங்க முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்!.. அதிமுக அதிர்ச்சி!...

கமல் பேசுறது புரியலயா?!. புது விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!...

திரைக்கவர்ச்சியா?.. இன எழுச்சியா?.. நாதக மாநாட்டில் தெறிக்கவிட்ட சீமான்..

திருச்சியில் நாதக மாநாடு!.. சீமான் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..

கொடுத்தா அது திமுக.. புடுங்குனா அது பாஜக!.. முக ஸ்டாலின் ராக்ஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments