அப்பல்லோவிற்கு சென்ற ஓபிஎஸ், தனபால்: முதல்வரை சந்தித்தார்களா!
அப்பல்லோவிற்கு சென்ற ஓபிஎஸ், தனபால்: முதல்வரை சந்தித்தார்களா!
Publish Date: Sat, 01 Oct 2016 (15:39 IST)
Updated Date: Sat, 01 Oct 2016 (15:42 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிக்ச்சை பெற்று வருகிறார். இவருக்கு நேற்று லண்டனில் இருந்து வரவழக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து 9 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் ஒருபக்கம் பரவினாலும், அவரை யாரும் இதுவரை சந்திக்கவில்லை என்ற தகவலும் பரவலாக உள்ளது.
இந்நிலையில் முதல் ஜெயலலிதாவுக்கு நேற்று லண்டனில் இருந்த வந்த மருத்துவர் சிகிச்சையளித்ததையடுத்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று சென்றுள்ளார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்களா என்பது குறித்தான் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.