Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவு எந்திரங்களை அச்சத்துடன் கண்காணிக்கும் எதிர்க்கட்சிகள்!

Webdunia
புதன், 22 மே 2019 (16:29 IST)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில்  வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதை தடுப்பதற்காக எதிர்க்கட்சியினர் இரவு பகல் பாராமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

 
சமீப நாட்களாக வாக்குபதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்எதிர்க்கட்சி வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறெல்லாம் மோசடி நடப்பதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கூறியும், எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குப் பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என்ற அச்சத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  கட்டிடங்களில் முகாமிட்டு இரவு பகல் பாராமல்  24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிப்பு பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினருடன் அமர்ந்து கட்சிப் பிரதிநிதிகள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவது குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மோசடி நடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments