வாக்குப்பதிவு எந்திரங்களை அச்சத்துடன் கண்காணிக்கும் எதிர்க்கட்சிகள்!

Webdunia
புதன், 22 மே 2019 (16:29 IST)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில்  வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதை தடுப்பதற்காக எதிர்க்கட்சியினர் இரவு பகல் பாராமல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

 
சமீப நாட்களாக வாக்குபதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்எதிர்க்கட்சி வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறெல்லாம் மோசடி நடப்பதற்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கூறியும், எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குப் பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என்ற அச்சத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  கட்டிடங்களில் முகாமிட்டு இரவு பகல் பாராமல்  24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிப்பு பகுதியில் இருந்து பாதுகாப்புப் படையினருடன் அமர்ந்து கட்சிப் பிரதிநிதிகள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவது குறித்த புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மோசடி நடப்பதற்கு வாய்ப்புகளே இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments