Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை முதல் தனிக்கடைகளை திறக்கலாம் - சென்னை மாநகராட்சி

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (22:34 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் 508 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4058ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 508 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 279 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், சென்னையில் நாளை முதல் தனிக்கடைகளை திறக்கமால் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நாளை திறக்கப்படும் கடைகள் ஏசி இல்லாமல் இயங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சென்னையில் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments