Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு - சென்னை மாநகராட்சி

சென்னை அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு - சென்னை மாநகராட்சி
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (22:39 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் 72 பேர்கள் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1755 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, வரும் மே  மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பலரும் பசி, பட்டிணியால் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவ  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதையடுத்து, தற்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது .

இந்த அறிவிப்பு ஏழை மக்கள் பலரின் பசியாற்ற உதவும் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடகை கேட்டு துன்புறுத்தியவரை கைது செய்த போலீஸார்!!