Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயார்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்..!

ravindranath

Siva

, வெள்ளி, 1 மார்ச் 2024 (07:06 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபி ரவீந்திரநாத் இம்முறை அந்த தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்த கேள்விக்கு தேனி உட்பட எந்த தென் மாவட்ட தொகுதியிலும் போட்டியிட தயார் என்று கூறினார்.
 
மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணி இணைவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைவது உறுதி என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்துவதாக சொல்வது வதந்தி என்றும் சின்னம் குறித்து இனிமேல் தான் நாங்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றும் பாஜக கூட்டணியில் பங்கேற்று அவரை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்றும் தேனி உட்பட எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சிகள் முடிவு செய்தாலும் அதை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 மாதங்களில் 7-வது முறையாக பரோல்.. குர்மீத் ரஹிம் விவகாரத்தில் நீதிமன்றம் கண்டனம்.!