Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயிலுக்கு ஒரே டிக்கெட்: விரைவில் அறிமுகம்

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (06:16 IST)
சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் அல்லது மின்சார ரயில்களில் ஒரு குறிப்பிட்ட இடம் வரை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் பேருந்துக்கு ஒரு டிக்கெட், மின்சார ரயிலுக்கு ஒரு டிக்கெட், மெட்ரோ ரயிலுக்கு ஒரு டிக்கெட் என தனித்தனியாக எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது.

இதனை தவிர்க்க மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலை இணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறியுள்ளார்.

மேலும் மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி, ஆயிரம் விளக்கு-கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் 2வது வழித்தடம் அமைக்கும் பணி அடுத்த நிதியாண்டில் துவங்கும்  என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் வகையில் டிக்கெட் அறிமுகமாகும் செய்தியால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments