பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயிலுக்கு ஒரே டிக்கெட்: விரைவில் அறிமுகம்

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (06:16 IST)
சென்னை போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ ரயில்கள் அல்லது மின்சார ரயில்களில் ஒரு குறிப்பிட்ட இடம் வரை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் செல்லும் பயணிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் பேருந்துக்கு ஒரு டிக்கெட், மின்சார ரயிலுக்கு ஒரு டிக்கெட், மெட்ரோ ரயிலுக்கு ஒரு டிக்கெட் என தனித்தனியாக எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணம், நேரம் வீணாகிறது.

இதனை தவிர்க்க மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலை இணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறியுள்ளார்.

மேலும் மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி, ஆயிரம் விளக்கு-கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் 2வது வழித்தடம் அமைக்கும் பணி அடுத்த நிதியாண்டில் துவங்கும்  என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் வகையில் டிக்கெட் அறிமுகமாகும் செய்தியால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments