Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓங்கி அறைந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு: பாஜகவின் தொடரும் அட்டூழியம்

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (04:04 IST)
பத்மாவதி படப் பிரச்சனையின்போது அந்த படத்தின் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி
மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர்களின் தலைகளை கொண்டு வந்தால் ரூ.10 கோடி பரிசு என பாஜக தலைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய  வகையில் பேசிய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. இந்த நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மகனை ஓங்கி அறைபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என  பாட்னா மாவட்ட பாஜக ஊடக தொடர்பாளர் அனில் சானி கூறியுள்ளார்.

ஓங்கி அறையும் அளவிற்கு லாலு மகன் அப்படி என்னதான் கூறினாராம்? பீகார் துணைமுதலமைச்சர் சுஷில்குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என்று சமீபத்தில் வெளியான வீடியோவில் லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் பேசியுள்ளார்.

இதனையடுத்துதான் சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் இந்த பரிசுத்தொகையை அறிவித்துள்ளனர். இருப்பினும் அனில்சானியின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments