Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் ஓடினாலும் டோக்கன் தரப்படமாட்டாது: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (20:09 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் விரைவில் மெட்ரோ ரயில் ஓட போவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளி வந்துள்ளது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் ஓடும் என்று தமிழக அரசு சற்று முன் அறிவித்தது 
 
இந்த நிலையில் டெல்லியில் மெட்ரோ ரயிலை 7ஆம் தேதி முதல் இயக்க இருப்பதாகவும் முதல் கட்டமாக அரசு அதிகாரிகளுக்கு மட்டும் மெட்ரோ சேவையை ஆரம்பிக்க உள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் மெட்ரோ ரயில் இயங்கினாலும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பயணிகளிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வெளியிட்டு இந்த மெட்ரோ சேவை வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
அதேபோல் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில் டோக்கன்கள் கிடையாது என்றும் பணப்பரிவர்த்தனைகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் முழுக்க முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமே பயணிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் மூலம் ரயில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments