Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனருக்கு அனுப்பப்படும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. இம்முறை ஒப்புதல் அளிப்பாரா?

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (09:54 IST)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சட்டத்துறை மூலம் இன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன
 
இம்முறையாவது ஆளுநர் ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பாரா அல்லது கிடப்பில் போடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments