ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை- புதிய மசோதா தாக்கல்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:40 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் விதமாக நவம்பர் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது. அதையடுத்து இன்று கூடிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அந்த தடை மசோதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார். இந்த தடையை மீறி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு  ரூ.5,000 அபராதம், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் சட்டத்திருத்த மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு டிராபிக்கில் பயணம் செய்வதை விட விண்வெளியில் பயணம் செய்வது எளிது: விண்வெளி வீரர் கிண்டல்

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments