Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பா? – தீவிர பரிசோதனை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:49 IST)
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை சோதித்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது மாதிரிகள் ஒமிக்ரான் கொரோனா ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை பொறுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்பது பற்றி தெரிய வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments