Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பா? – தீவிர பரிசோதனை!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:49 IST)
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை சோதித்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது மாதிரிகள் ஒமிக்ரான் கொரோனா ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளை பொறுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்பது பற்றி தெரிய வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments