Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் நடந்துள்ளது! - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்!

Prasanth Karthick
ஞாயிறு, 16 மார்ச் 2025 (08:25 IST)

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், இதுபோன்ற தேர்தல்கள் ஏற்கனவே இந்தியாவில் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் “ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு தேர்தல் கமிஷன், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு என அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதன் பின்னரே மத்திய அமைச்சரவையிலும் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் தேசத்தின் நலன் சார்ந்தது. எனவே இதை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்கு முன்னர் 1952, 1957, 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் கூட்டணியா? ஆட்சியில் கூட்டணியா? தொடரும் அதிமுக - பாஜக முரண்பாடு! குழப்பத்தில் தொண்டர்கள்!

மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம்.. திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம்..!

மருமகனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அடம் பிடிக்கும் மாமியார்! - சிக்கலில் போலீஸ்!

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments