Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்! அமைச்சர் அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (09:42 IST)
தமிழகத்தில் உள்ள 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை குழுவால் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments