Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா.. ஊரடங்கு அமல்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (09:39 IST)
சீனாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. 
 
இந்த நிலையில் சீனாவை அடுத்து வடகொரியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக தலைநகர் பியோங்காங் என்ற பகுதியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீடுகளிலே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவை அடுத்து வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments