Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலுமிச்சை விலை ஒரு கிலோ ரூ.200ஆக அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:00 IST)
கடந்த சில நாட்களாக எலுமிச்சை விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு கிலோ ரூபாய் ரூ.200ஆக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கோடை வெயில் நேரத்தில் எலுமிச்சம் பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள தமிழக மக்கள், எலுமிச்சை விலை திடீர் உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் என்ற சந்தையில் தான் எலுமிச்சம் பழம் மிக அதிகமாக விற்பனையாகும். இந்த சந்தையில் இன்று ஒரு கிலோ ரூ.200ஆக விற்பனையாகி வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது
 
புன்னையாபுரம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சங்கனாப்பேரி, அரியநாயகிபுரம், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி நடைபெற்று வரும் எலுமிச்சை விலை ஏற்றத்தால் எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments