Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோடி கொள்ளை: திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (12:52 IST)
திருச்சியில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சியில் தலைமை தபால் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஆம்னி பேருந்தில் இருந்து இறங்கினர். அப்போது அங்கே காரில் வந்த மர்ம கும்பல் நிதி ஊழியர்களிடம் இருந்த ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
 
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கண்டோன்மென்ட்  போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருச்சியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments