Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏண்டி நக போடல: மருமகளை டார்ச்சர் செய்து சாவடித்த மாமியார்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (12:23 IST)
சென்னையில் மாமியாரின் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அருள் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அருள் பிரியா தன் பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால், அவர்கள் அருள் பிரியாவிற்கு நகை போடவில்லை.
 
இதனால் அருள் பிரியாவின் மாமியார், அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். உங்க வீட்ல நகை போடுறதுக்கு கூட வழி இல்லையா என்றெல்லாம் அவர் மனம் புண்படும்படி பேசியுள்ளார். இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற அருள்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இதுகுறித்து அருள்பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அவர்கள் நந்தகுமாரிடமும் அவரது தாயாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments