Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (08:40 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டி உள்ளார் 
 
இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். அதன் பிறகு இது புரளி என்பது தெரியவந்தது
 
 இதனை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி என்ற பகுதியை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் தான் மிரட்டல் விடுத்தது என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது
 
 

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments