Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் வருகையொட்டி... மாபெரும் தூய்மை பணி- அண்ணாமலை

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (19:08 IST)
பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜனவரி 2 ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார். இங்கு, 1200 கோடியில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியை சுத்தம் செய்யும் பணி காலை 6  மணி முதல் 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

‘’வரும் ஜனவரி 2, 2024 அன்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வருகையையொட்டி, தமிழ்நாடு பாஜக   சார்பாக, ஸ்வச் பாரத் - தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம் காலை 6 முதல் 8 மணி வரையில், திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது.

இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களும், பொதுமக்களும், கீழ்க்காணும் இணைப்பில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments