Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 7 வது நாளில் முன்னாள் காதலனுடன் ஓடிய இளம்பெண்

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (12:18 IST)
இளம்பெண் ஒருவர் திருமணமாகி 7 வது நாளிலே, கணவனை விட்டு தனது முன்னாள்  காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த் ஜோதி என்பவருக்கும் கடந்த மாதம் 22ந் தேதி திருமணம் நடைபெற்றது. புஷ்பலதா திருமனத்திற்கு முன்பாகவே வேறு ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆனந்த் ஜோதியை திருமணம் செய்து கொண்டார்.
 
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி, புஷ்பலதாவும் அவரது கணவர் ஆனந்த் ஜோதியும் இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அங்கே வந்த புஷ்பலதாவின் முன்னாள் காதலன் தன்னுடன் வரும்படி புஷ்பலதாவிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆன்ந்த ஜோதி, புஷ்பலதாவின் முன்னாள் காதலனை கண்டித்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த புஷ்பலதா, ஆனந்த கட்டிய தாலியை கழட்டி அவர் மூஞ்சில் வீசிவிட்டு முன்னாள் காதலனுடன் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற ஆனந்த துக்கம் தாளாமல் விஷமருந்தி தற்கொலைக்கு முற்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்பொழுது அபாய நிலையை தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.
 
அதனையடுத்து ஆனந்த் ஜோதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments