Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்னி பேருந்துகள் சேவை எப்போது துவங்கும்?

ஆம்னி பேருந்துகள் சேவை எப்போது துவங்கும்?
, புதன், 23 செப்டம்பர் 2020 (10:17 IST)
அக்டோபர் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.  
 
அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 7 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம்னி சங்க பொதுச் செயலாளர் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவித்தார். 
 
மேலும், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. எங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தும், எங்களால் இயக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  
 
ஏனெனில் ஒரு பஸ்சை இயக்குவதற்கு குறைந்தது ரூ.2 லட்சமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2 காலாண்டு சாலை வரியாக ரூ.2½ லட்சமும் என மொத்தம் ரூ.4½ லட்சம் தேவைப்படுகிறது. எனவே முதல்வர் 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திட வேண்டும் என்று கோரினர்.
 
இந்நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 25 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அதன் பின்னர் ஆம்னி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக முடிவெடுத்து அக்டோபர் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90 ஆயிரத்தை தாண்டிய பலிகள்; இந்தியாவில் கொரோனா நிலவரம்!