சென்னைக்கு நிறுத்தப்பட்ட ஆம்னி பஸ் சேவை.. இன்று முதல் சீராகும் என தகவல்..!

Mahendran
புதன், 16 அக்டோபர் 2024 (12:47 IST)
சென்னையில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், வெளி மாநிலங்களிலும் இருந்து சென்னைக்கு சுமார் 800 ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் கன மழை பெய்யும் என்றும், வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டதை அடுத்து, மிகவும் குறைந்த அளவே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
தினமும் 800 ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு வரும் நிலையில், 350 பேருந்துகள் மட்டுமே கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்பட்டதாகவும், இன்று மழை ஆபத்து குறைந்ததால் நாளை முதல் மீண்டும் 800 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்ததை ரத்து செய்துவிட்டதால் குறைந்த அளவு பயணிகள் இருந்ததாகவும், அதனால் பல ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’மோந்தா’ புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும்? வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!

கர்நாடக அமைச்சரவையில் 'காமராஜ் திட்டம்' அமல்? 12 மூத்த அமைச்சர்களுக்குக் 'கல்தா'

அதானிக்கு ரூ.33,000 கோடி ரகசியமாக நிதி வழங்கியதா மத்திய அரசு? வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகளிடம் காட்டவில்லை': நயினார் நாகேந்திரன்

சாலையில் இருந்த குழியால் பெண் வங்கி அதிகாரி பரிதாப பலி.. மோசமான சாலையை செப்பனிடாததால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments