Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனசாட்சியே இல்லைல.. போலி நோட்டை கொடுத்து முதியவரை ஏமாற்றிய நபர்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:08 IST)
கோபி அருகே போலி பணத்தை கொடுத்து மருந்து வாங்க சென்ற முதியவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான சித்தன். 72 வயது முதியவரான இவர் தனது மகளின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றுள்ளார்.

அப்போது அந்த பக்கம் வந்த நபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். நல்ல உள்ளம் கொண்டவரான சித்தன் தன்னிடம் இருந்த சில்லறை பணத்தை கொடுத்து விட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு மருந்தகம் சென்றுள்ளார்.

மருந்தகம் சென்ற பின்னர்தான் தெரிந்துள்ளது அது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பணம் என்று. மருந்து வாங்க சென்ற முதியவரிடம் இப்படி மனசாட்சியே இல்லாமல் ஏமாற்றிய நபர் குறித்து பலரும் வருந்தி கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!

காலையில் பாஜக.. மாலையில் காங்கிரஸ்! கட்சிக்கு கட்சி தாவும் பலே முன்னாள் எம்.பி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments