Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் கொரோனா மூன்றாவது அலையா? – அதிகாரிகள் விளக்கம்!

கோவையில் கொரோனா மூன்றாவது அலையா? – அதிகாரிகள் விளக்கம்!
, புதன், 9 ஜூன் 2021 (08:23 IST)
கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிக தீவிரமாக உள்ள நிலையில் கோவையில் கடந்த சில நாட்களில் பாதிப்புகள் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேகமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் பரவல் விகிதமும் கட்டுப்படுத்தபட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் “முழு ஊரடங்கு, தொற்று பாதிப்பிற்கு விரைந்து சிகிச்சை அளித்தல் போன்றவற்றால் 50 சதவீதத்திற்கும் மேல் இருந்த பாதிப்பு தற்போது 22 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், சானிட்டைசர் கொண்டு கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே மூன்றாம் அலை தாக்கத்திலிருந்து தப்ப முடியும்” என கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவின் இணையதளத்தில் தமிழ்: சாதித்து காட்டிய தமிழர்கள்