வினாத்தாள் லீக்: தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:08 IST)
திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
 
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12 ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்புதல் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. 
 
இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்த முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.
 
இந்நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தேர்வு முறைகேடுகளை தடுக்க தவறியதால் பள்ளிக்கல்வித்துறை அருள் செல்வம் மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்துள்ளது. 

மேலும் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொற்ப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments