Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 28ஆம் தேதி தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (10:21 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 28ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதால் அன்றைய தினம் 3 மணி முதல் 6 மணி வரை தரிசனம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த அன்னாபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் தரிசனம் ரத்து செய்யப்படும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே அன்றைய தினம் முழுவதும் பக்தர்களுக்கு கோவிலில் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாலை 6:00 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments