Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ஒபாமா - ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிப்பு

சென்னையில் ஒபாமா - ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிப்பு
, திங்கள், 28 செப்டம்பர் 2015 (23:09 IST)
அமெரிக்கா அரசை கண்டித்து, சென்னையில் அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் இலங்கை அதிபர்  ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது.
 

 
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து, உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற  அமெரிக்கா அரசின் கருத்தை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மதிமுக, மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட  32 அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு, போராட்டம் நடந்தினர். அப்போது, அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் இலங்கை அதிபர்  ராஜபக்சே உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது.
 
மேலும், முற்றுகை போராட்டம் நத்திய வைகோ உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் என்று அறிவித்தார். 
 

Share this Story:

Follow Webdunia tamil