Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா? சசிகலா முதலமைச்சர்?

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (15:02 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


 


ஜெயலலிதா மறைவுக்கு அதிமுக கட்சி சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சசிகலா தமிழக முதல்வராக போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இதனிடையே ஜெயலலிதா ரத்த சொந்தமான அவரது அண்ணன் மகள் தீபா தனியாக கட்சி தொடங்கி சசிகலா எதிராக போட்டியிட தயாராகி உள்ளார். இந்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் நாளை திடீரென தமிழகம் வர உள்ளார். அதிமுக அமைச்சர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை குழு தொடங்கியது. இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்தார். ஆனால் அதற்கான பதில் சசிகலா தரப்பில் இருந்து எதுவும் வெளியாகவில்லை. இந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் அதிமுக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஏற்பாடுகள் சசிகலா அடுத்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தெரிய வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

கப்பலை கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்.. ரூ.9,531 கோடி இழப்பீடு தந்தால் தான் விடுவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments