Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டும்… ஓபிஎஸ் கோரிக்கை!

Webdunia
புதன், 26 மே 2021 (12:24 IST)
தமிழகத்தில் மின்சாரப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை :-

வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புகள் உருவாகுவதற்கும், பொருளாதார வளர்சிக்கும், இன்றியமையாததாக விளங்குவது, மாறி வரும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மின்சாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.முழு ஊரடங்கு காலத்தில் தங்கள் உயிரை துச்சமென மதித்து மின் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா என்ற கொடிய நோய் தாக்கப்பட்டு இதுவரை 200க்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை முன் களப்பணியாளர்கள் அறிவித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றும் நோய்த்தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள், முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படாததால், தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை என்று எடுத்துக்கூறி, தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அதற்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின்வாரிய பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவும், முன் களப் பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கும் கிடைக்கும் மாண்புமிகு தமிழக முதல்மைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments