Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22வது இடத்தில் ஓ பன்னீர்செல்வம்.. தேர்தல் ஆணையமும் வஞ்சிக்கிறதா?

Mahendran
சனி, 6 ஏப்ரல் 2024 (08:20 IST)
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 22 ஆவது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் அவரது பெயரிலேயே 5 வேட்பாளர்கள் அதே தொகுதியில் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதன் பின்னர் சுயேட்சைகள் என வரிசையாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் பலாப்பழம் சின்னம் 22 ஆவது இடத்தில் அதாவது கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளதாக தெரிகிறது.

அனைத்து பன்னீர் செல்வங்களின் இனிசியலை கணக்கில் எடுத்துக்கொண்டு அகரவரிசைப்படி இந்த இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அதன்படி ஓ பன்னீர்செல்வதற்கு ஒதுக்கப்பட்டது 22 வது இடம் என்பது சரிதான் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுவதாக தெரிகிறது.

தன்னுடைய பெயரும் சின்னமும் 22-வது எப்படி தேடி பிடித்து வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments