Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு ஏது இவ்வளவு பணம்? ஷாக்கான ஓபிஎஸ்!!

Webdunia
திங்கள், 13 மே 2019 (09:30 IST)
செந்தில் பாலாஜிக்கு அப்படி எவ்வளவு பணம்தான் வைத்திருக்கிறார் என தெரியவில்லை என ஓபிஎஸ் வியப்பாக கேட்டுள்ளார். 
 
நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பேசினார். ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுகவிற்கு துரோகம் இழைத்த செந்தில் பாலாஜிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். 
அதிமுகவின் கூட்டத்திற்கு போகாதே என்று சொல்லி திமுகவின் செந்தில் பாலாஜி பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள். நான் 40 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், கூட்டத்துக்கு போ என்று சொல்லி பணம் கொடுப்பாங்க. ஆனால், இவர் போகாதே என பணம் கொடுக்கிறார். 
 
செந்தில் பாலாஜி அப்படி எவ்வளவு பணம்தான் வைத்திருக்கிறார். இந்த தேர்தலுடன் கட்சி தாவி தாவி செல்லும் செந்தில் பாலாஜிக்கு முடிவு கட்ட வேண்டும். அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என பேசி பிரச்சாரம் மேற்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments