Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவை விட்டு சென்ற சனி; போட்டு தாக்கும் ஓபிஎஸ்!!

அதிமுகவை விட்டு சென்ற சனி; போட்டு தாக்கும் ஓபிஎஸ்!!
, சனி, 11 மே 2019 (12:53 IST)
ஓ.பன்னிர் செல்வம் அமமுக கட்சியையும், அந்த கட்சியினரையும் அதிமுகவை விட்டு சென்ற சனி என விமர்சித்து பேசியுள்ளார். 
 
வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
அந்த வகையில் தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, 
 
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்தது கட்சியே இல்லை. அது வெறும் அணி. அதிமுகவை விட்டுச் சென்ற சனி. அதிமுகவில் இருந்து வளர்ந்து கொழுத்தவர்கள் இன்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என கூறுவது எவ்வளவு பெரிய ராஜ துரோகம் என அமமுகவையும், அக்கட்சியினரையும் விமர்சித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணகிரி மக்களவை தேர்தல் 2019