Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்த 'செவிலித்தாய்' கதீஜா!

cm stalin- kadheeja
, வெள்ளி, 30 ஜூன் 2023 (20:55 IST)
செவிலியராகப் பணியாற்றி வந்த கதீஜா பீவி தன் பணிக்காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்றுடன் ஓய்வு  பெற்ற நிலையில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவரை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’33 ஆண்டுகளுக்கு முன்பு தான் கருவுற்றிருந்த நிலையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள், தனது பணிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்று ஓய்வுபெறுகிறார்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின் பெருந்தொண்டுக்கும் அடையாளச் சின்னமாக இவரது பணி அமைந்திருக்கிறது.

பத்தாயிரம் பிள்ளைப்பேற்றுக்குத் துணைபுரிந்து பல குடும்பங்களில் மகிழ்ச்சியை விதைத்த 'செவிலித்தாய்' கதீஜா பீவி அவர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து, அவரது ஓய்வுக்காலம் நிறைவானதாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் இறையன்புவை பாராட்டி முதல்வர் கடிதம்