Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை யாரும் கடத்தல.. மனுவை வாபஸ் வாங்குறேன்! – வேட்பாளர் திடீர் முடிவு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:49 IST)
புதுக்கோட்டையில் மாயமான வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பிலும் போட்டியிட பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் அனைத்து பகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சியின் 3வது வார்டில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த வார்டில் பெரிய கட்சிகள் சார்பில் யாரும் வேட்பாளராக நிற்கவில்லை என கூறப்படுகிறது.

அதே வார்டில் சுயேச்சையாக நிற்கும் லட்சுமணன் என்பவர் செல்வத்தை தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது செல்வத்தை லட்சுமணன் கடத்திவிட்டதாக செல்வத்தின் குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும் புகார் அளித்தனர். இந்நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ வெளியிட்டுள்ள வேட்பாளர் செல்வம், தனது வேட்புமனுவையும் திரும்ப பெற்றுள்ளார். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

சீமான் ஒரு கிணற்று தவளை: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments