Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (02:27 IST)
விண்ணப்பித்த நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.
 

 
சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் எவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்ச்சர் இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்.
 
பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தட்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறானது” என்று அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அவர், ‘பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments