Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை எப்போது??

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (10:03 IST)
தமிழகத்துக்கான வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் இதனால் வட தமிழ்நாடு மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து தென் மேற்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதியுடன் விடைபெற உள்ளதால், தமிழகத்துக்கான வட கிழக்கு பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 35 - 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments