Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி முடிஞ்சிட்டே.. மீன் சந்தையில் குவிந்த அசைவ பிரியர்கள்!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (10:29 IST)
இன்றுடன் புரட்டாசி மாதம் முடிவடையும் நிலையில் இன்றே அசைவ பிரியர்கள் பலர் மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்துள்ளனர்.

புரட்டாசி மாதம் அசைவம் ஏதும் சாப்பிடாமல் பலர் விரதம் பின்பற்றும் நிலையில் அந்த காலக்கட்டத்தில் மீன், கோழி உள்ளிட்ட அசைவங்கள் விற்பனை மந்தமாவதுடன், விலையும் சல்லிசாய் குறைகின்றன. இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் காரணமாக கடந்த சில வாரங்களாக மீன் விலை மற்றும் விற்பனை குறைந்திருந்தது.

இந்நிலையில் நேற்றுடன் புரட்டாசி கடைசி சனியும் முடிந்துவிட்டதால் இன்றே அசைவம் வாங்க அசைவ பிரியர்கள் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக மக்கள் குவிந்த நிலையில் மீன்கள் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் ஆடு, கோழி கறிக்கடைகளிலும் மக்கள் அதிகமாக கறி வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments