Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்: இறுதி வேட்பாளர் பட்டியல் எப்போது?

இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்: இறுதி வேட்பாளர் பட்டியல் எப்போது?
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (08:12 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன என்பது வருகிறோம். 
 
திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் கொள்ளும் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று மாலையுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இதனை அடுத்து வரும் 7ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை 37,518 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஆளுனரை சந்திக்கின்றார் அண்ணாமலை: முக்கிய ஆலோசனையா?