Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுவாக்கு எண்ணிக்கை இல்லை.. நீதிமன்றம் செல்லுங்கள்: விஜய பிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில்..!

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (11:58 IST)
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்றும்,  தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்த நிலையில் அந்த மனுவுக்கு தான் தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிக் பாஸ் செட் அமைக்கும் போது ஏற்பட்ட விபத்து: வடமாநில தொழிலாளி காயம்

1,111 ரூபாயில் விமானத்தில் பயணம் செய்யலாம்: இண்டிகோ சூப்பர் அறிவிப்பு..!

வெயிலும் அதிகரிக்கும், மழையும் பெய்யும்! தமிழக வானிலை நிலவரம்..!

பல சோதனைகளை தாண்டி 75-வது ஆண்டு நோக்கி பயணமாகும் ஒரே இயக்கம் தி.மு.க- அமைச்சர் தங்கம் தென்னரசு....

குடிநீர் பைப் லைனுக்காக வெட்டிய பள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனியார் பள்ளி வாகனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments