Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுவாக்கு எண்ணிக்கை இல்லை.. நீதிமன்றம் செல்லுங்கள்: விஜய பிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில்..!

Mahendran
வெள்ளி, 14 ஜூன் 2024 (11:58 IST)
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்றும்,  தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்த நிலையில் அந்த மனுவுக்கு தான் தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments