Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாட்டரி கொண்டு வரும் திட்டமே இல்லை… நிதியமைச்சர் பதில்!

லாட்டரி கொண்டு வரும் திட்டமே இல்லை… நிதியமைச்சர் பதில்!
, திங்கள், 26 ஜூலை 2021 (10:58 IST)
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி கொண்டு வரும் திட்டம் இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அண்ணா காலத்தில் நிதி திரட்டுவதற்காக லாட்டரி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் அது தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் லாட்டரி அதிபரும் திமுக அனுதாபியுமான மார்ட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னணியிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலையை சரிசெய்ய லாட்டரி கொண்டுவரும் திட்டமே இல்லை எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிராம் உலோகம் கூட சுரங்கத்திலிருந்து வரவில்லை - உலகை ஈர்த்த ஒலிம்பிக் பதக்கங்கள்