Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நிறைவு.. சென்னையில் அனுமதி மறுப்பு..!

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:17 IST)
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நிறைவடையும் நிலையில்  வடமாநிலங்களில் கலவரம் நடந்ததை சுட்டிக்காட்டி சென்னையில் பாஜக யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் சென்னை தங்கசாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார் என்பதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை இன்று சென்னையில் நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இன்று வரை 198 தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை செய்த நிலையில் நேற்று உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்

இந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரை சென்னையில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்

வட மாநிலங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் இந்த பேரணிக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவை போலீசார் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.. கறார் வேண்டாம்.. சொத்து வரி குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்?

திருமண தகராறுகள் வழக்குகளில் உடனடி கைது நடவடிக்கை எடுக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

16 வயது மாணவனுக்கு பலமுறை பாலியல் பலாத்காரம்.. கைதான ஆசிரியைக்கு எளிதாக கிடைத்த ஜாமின்..!

ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டில் இரட்டை குழந்தைகள் பிரசவம்; ஒரு குழந்தை உயிரிழப்பு!

ஆதார், வாக்காளர் அட்டைகள் நம்பகமானது அல்ல.. பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் வேண்டும்: தேர்தல் ஆணையம்

அடுத்த கட்டுரையில்
Show comments