Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நிறைவு.. சென்னையில் அனுமதி மறுப்பு..!

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:17 IST)
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நிறைவடையும் நிலையில்  வடமாநிலங்களில் கலவரம் நடந்ததை சுட்டிக்காட்டி சென்னையில் பாஜக யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் சென்னை தங்கசாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார் என்பதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை இன்று சென்னையில் நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இன்று வரை 198 தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை செய்த நிலையில் நேற்று உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்

இந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரை சென்னையில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்

வட மாநிலங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் இந்த பேரணிக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவை போலீசார் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments