Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்லஜ் ஆற்றுப் பாறையில் மனித மூளையின் பாகங்கள்.. டி.என்.ஏ ஆய்வு முடிவு எப்போது?

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:10 IST)
சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளையின் பாகங்கள் யாருடையது என்று இன்று ஆய்வு செய்ய கொடுக்கப்பட்ட நிலையில் அதன் முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள்  சைதை துரைசாமியின் மகன் வெற்றியுடையதா என்பது குறித்த டி.என்.ஏ ஆய்வு  முடிவு இன்று வெளியாகிறது
 
முன்னதாக சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் நண்பர்களுடன் சென்ற கார் ஆற்றில் விழுந்த நிலையில் அவரை தேடும் பணி  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய செல்போன் கிடைத்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் அதன்பின் மனித மூளையின் சில பாகங்கள் கிடைத்ததாகவும் செய்தி வெளியானது
 
இந்த விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் வெற்றி துரைசாமியை காணவில்லை என்பதால் அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் தேர்தல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் மீட்க குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments