Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 15. சுதந்திரதின விழா: பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (07:45 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடும் என்றும் அன்றைய தினம் தமிழக முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றுவார் என்பதும் தெரிந்தது 
 
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு இருக்கும் அதே நிலையில் பொதுமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று தமிழக அரசு கூறிவரும் நிலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே இந்த ஆண்டு சுதந்திர தின விழா அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments