Publish Date: Wed, 01 May 2019 (21:22 IST)
Updated Date: Wed, 01 May 2019 (21:25 IST)
31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்ததால் இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் 7ஆம் தேர்வு நடந்தது. முதல்நிலை தேர்வான இந்த தேர்வில் 3,562 கீழமை நீதிபதிகள் பங்கேற்றனர்.
இந்த தேர்வின் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு முடிந்தவுடன் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கேள்விகளுக்கு தவறான பதிலளித்தால் மைனஸ் மதிப்பெண்களும் உண்டு
இந்த நிலையில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளிவந்த நிலையில் இந்த தேர்வை எழுதிய 3562 கீழமை நீதிபதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த பணி்யிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.