Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கட்சி துவக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: டிடிவி தினகரன்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (22:59 IST)
நாளை எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி டிடிவி தினகரன் புதிய கட்சியை திறக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்போதைக்கு புதிய கட்சி துவக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

குன்னூரில் செய்தியாளர்களை இன்று சந்தித்த டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் கலந்து பேசிய பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு புதிய கட்சி தொடங்குவதாக இருந்தால் கண்டிப்பாக அனைவரிடமும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றி இரட்டை இலை சின்னத்தை பெறுவது ஒன்றே தனது குறிக்கோள் என்றும் அது விரைவில் நடந்தேறும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் நாளை எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது கோத்தகிரியில் ஜெயலலிதா சிலையை டிடிவி தினகரன் திறக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments