Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் இயக்கப்படும் பேருந்துகளில் புதிய கட்டணமா? போக்குவரத்து துறை விளக்கம்

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (12:54 IST)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒருசில நிபந்தனைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது
 
கோவை, தர்மபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம், நெல்லை, திண்டுக்கல், காஞ்சிபுரம், சென்னை என இந்த 8 மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்றும், ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் அரசு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ பாஸ் விண்ணப்பிக்க https://rtos.nonresidenttamil.org என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து துறை  தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments