Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி முடிந்துவிட்டது: செ.கு. தமிழரசன் அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (08:46 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டது. இந்த கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதியும் 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மக்கள் நீதி மய்யம், குடியரசு கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
 
இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், 'கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணி முடிந்துவிட்டது' என, தெரிவித்தார். 
 
மேலும்  தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாகவே, மக்கள் நீதி மைய்யத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாகவும் தற்போது, அந்த கூட்டணி முடிந்து விட்டதாகவும் கூறிய குடியரசுக் கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன், 'வரும் உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறினார். 
 
கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி வைத்த ஒரே கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments