Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 ஆம் தேதி இறைச்சி கூடங்கள் மூடல்…

Arun Prasath
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (12:57 IST)
மகாவீர் நிர்வான் நாளையொட்டி வரும் 28 ஆம் தேதி, அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமண மதத்தை தோற்றுவித்தவரான மகாவீர் நிர்வான் நாள் இந்தியா முழுவதும் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை சமணர்கள் தங்கள் மதத்தின் முக்கிய நாளாக கருதுகின்றனர்.

சமண மதத்தில் அறிவுறுத்தப்படும் ஜீவகாருணியத்தால் புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கின்றனர் சமணர்கள். இந்நிலையில் மகாவீர் நிர்வான் நாளையொட்டி சென்னையில் வரும் 28 ஆம் தேதி அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அதற்கு முந்திய நாளான தீபாவளியில் ஆடு, மாடு, மற்றும் பிற கறி விற்பனைகள் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளான மகாவீர் நிர்வான் நாளில் அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments